மேலும்

நாள்: 13th August 2017

சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறுகிறார் மகிந்த – சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைகிறார்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

சாகல ரத்நாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, சிறிலங்காவின் கரையோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

கைவிடப்படுகிறது 20 ஆவது திருத்தச்சட்டம் – நொவம்பரில் 3 மாகாணசபைகளுக்கு தேர்தல்

சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு, கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் தீவிரம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்தில் சுஸ்மா – வசந்த சேனநாயக்க சந்தித்துப் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூடன் சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நேபாளத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார செயலராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் பிரசாத் காரியவசம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக பிரசாத் காரியவசம், நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். அதேநாளில்,தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலராக உள்ள எசல வீரக்கோன், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கின் நிலைமைகளை பார்வையிட வருகிறார் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்

வடக்கின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு

2019ஆம் ஆண்டு வரையில் மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு வழி செய்யும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.