மேலும்

மாதம்: February 2017

வடக்கு, கிழக்கில் தனது திட்டங்களுக்கு கூட்டமைப்பை ஒத்துழைக்கக் கோருகிறது இந்தியா

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ். ஜெய்சங்கர் கோரியுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பெப்ரவரி 09ஆம் நாள் கொழும்பிலுள்ள உயர்மட்ட அமைச்சர்களைச் சந்தித்தனர். இவர்கள் இந்தச் சந்திப்பில் தமது பொறுமை குறைந்து கொண்டு செல்வதாகவும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இன்னமும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆயுதம் தாங்கிய காவல்துறைக் குழுக்கள் பணியில்

சமூக விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆயுதம் தாங்கிய நடமாடும் காவல்துறைக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குள் ஒற்றுமை அவசியம் – அறிவுரை கூறிய இந்திய வெளிவிவகாரச் செயலர்

தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது – ஜெய்சங்கர் கைவிரிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஐவரும் இடைநிறுத்தம்

தி நேசன் இதழின் இணை ஆசிரியராக இருந்த கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நிலமீட்புப் போராட்டத்துக்கு ஆதரவாக வடபகுதி மாணவர்கள்

சிறிலங்கா விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலக்குடியிருப்பு மக்கள், கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக 21 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

சிறிலங்கா அதிபர், கூட்டமைப்புடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சிறிலங்கா அதிபர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகளுடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தினார்.

சீன உதவி வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம்

சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யோ சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பதற்றத்தில் கோத்தா – சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை

தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சட்டவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.