சீன உதவி வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம்
சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யோ சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யோ சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தகவல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
சீன வெளிவிவகார அமைச்சில், மூன்றாவது நிலையில் உள்ள உதவி வெளிவிவகார அமைச்சரான கொங் சுவான்யோ, ஆசிய மற்றும் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பானவராவார்.
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் தொடர்பான செயற்பாடுகளை இடைநிறுத்த சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலும், இந்திய வெளிவிவகாரச் செயலர் சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையிலும், சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சரின் இந்த திடீர் பயணம் இடம்பெற்றுள்ளது.