மேலும்

யாழ்ப்பாணத்தில் ஆயுதம் தாங்கிய காவல்துறைக் குழுக்கள் பணியில்

jaffna policeசமூக விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆயுதம் தாங்கிய நடமாடும் காவல்துறைக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

காங்கேசன்துறை பிரிவுக்குட்பட்ட 17 காவல் நிலையங்களிலும் ஏற்கனவே இந்த காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் இந்த காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடும்.

எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற ஐந்து காவலர்கள் ஒவ்வொரு குழுவிலும், இணைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வீதித்தடைகளை ஏற்படுத்தி, சந்தேகத்துக்குரிய வாகனங்களைச் சோதனையிடுவதற்கும் இந்த காவல்துறை குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *