மேலும்

மாதம்: December 2016

கவலைக்கிடமான நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா – அப்பல்லோ அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பிடல் காஸ்ட்ரோவும் தமிழரின் உரிமை போராட்டமும்

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகப் புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உணரப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் காலப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் காஸ்ட்ரோ மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தவர்.

வெளிநாட்டுப் போர்க்கப்பல்களை குறிவைக்கிறது திருகோணமலை துறைமுகம்

வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்கும் வகையில் திருகோணமலை துறைமுகத்தில், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன  தெரிவித்துள்ளார்.

தமிழையும் அரசகரும மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த, தமிழையும் அரச கரும மொழியாக அறிவிக்கும் யோசனைக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

மாரடைப்பு ஏற்பட்ட ஜெயலலிதாவுக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச்சிகிச்சை

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, அவருக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் பேராசிரியர் சூரியநாராயணின் முயற்சி தோல்வி

பாக்கு நீரிணையில் இந்திய- சிறிலங்கா மீனவர்கள் கூட்டாக மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியப் பேராசிரியர் வி.சூரியநாராயண், முன்வைத்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – குழம்பும் ஆய்வாளர்கள்

ட்ரம்ப்  ஆட்சியில் ஆசியா மற்றும் ஏனைய பிராந்தியங்களில் ஏற்படக் கூடிய உள்ளார்ந்த தாக்கங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்வதில் வெளியுறவு அரசியல் ஆய்வாளர்கள் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்து வரும் வாரங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.