கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்
ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கிரிசாமி என்ற ஜப்பானிய கடற்படைக் கப்பலே, நல்லெண்ண மற்றும் விநியோக தேவைகளுக்காக நேற்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது.
இந்தப் போர்க்கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.
இன்று இந்தப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
சிறிலங்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, சிறிலங்கா வந்துள்ள 96 ஆவது வெளிநாட்டுப் போர்க்கப்பல் இதுவாகும்.