மேலும்

கருணாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

karuna-arrestஅரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

டிசெம்பர் 7ஆம் நாள் வரை கருணா விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலாபிட்டிய கடந்தவாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிறைச்சாலையில் கருணாவின் உயிருக்கு ஆபத்து இருக்கதாக கூறி, அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று அவரது சட்டவாளரால் இன்று கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் பிணை மனுவை நிராகரித்த நீதிவான், டிசெம்பர் 7ஆம் நாள் இதனை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *