மேலும்

மாதம்: December 2016

சிறிலங்கா மக்களின் வரிப்பணத்தை அமெரிக்காவில் இருந்தபடி ஏப்பம்விட்ட கோத்தாவின் மகன்

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் மகனே தங்கியிருந்தார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக சீனா கடும் நிலைப்பாடு

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக, கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும், மனித உரிமைகளை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, சிறிலங்காவின் பெயரைக் கெடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை மிரட்டும் நடா புயல் – யாழ். குடாநாடு தப்புமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள நடா எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு சற்று வடக்காக, வடமேற்குத் திசையில் கடந்து செல்லும் என்று வானிலை ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.