மேலும்

மாதம்: October 2016

எந்த சமஷ்டி முறையை உருவாக்கவும் விடமாட்டோம் – சிறிலங்கா அமைச்சர்

புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்காது என்று, சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க கோத்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி

சீனாவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

ரணில் இன்று இந்தியா பயணம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் அங்கிருந்து நேரடியாகப் புதுடெல்லி வரவுள்ளார்.

தெற்கில் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும் சித்திரிக்கப்படுகிறேன் – விக்கி வருத்தம்

தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவைக் கட்டியெழுப்ப அரசியல் நீதி மட்டும் போதாது

26 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது அரசியல் சார் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியே இடம்பெற்றது. பெரும்பான்மை சிங்கள மக்களால் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக ரீதியான புறக்கணிப்புக்களே அரசியற் பிரச்சினைக்கான மூலகாரணமாக அமைந்தது.

மைத்திரியுடன் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிப்பு – நியூசிலாந்தில் ரணில்

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலத்துடன் ஒழிக்கப்படும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதன்முதலில் ஊடகக்கல்விக்கான பாடத்திட்டத்தை வரைந்த ஈ.ஆர்.திருச்செல்வம்

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ஈ.ஆர்.திருச்செல்வம் (வயது-83) கடந்த புதன்கிழமை, யாழ்ப்பாணத்தில் காலமானார்.

ருக்கி பெர்னான்டோவிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணை

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாடு ஒன்றில் பங்கேற்கச் சென்ற சிறிலங்காவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ, கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கோத்தாவுக்கு சீனா அழைப்பு – நீதிமன்றத்தின் கையில் முடிவு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பதா என்பது குறித்து நீதிமன்றம் நாளை முடிவு செய்யவுள்ளது.

கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தார் யாழ்.வீராங்கனை அனிதா

சிறிலங்காவின் 42 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனிதா, கோல் ஊன்றிப் பாய்தல் பிரிவில் தேசிய மட்டச் சாதனையை முறியடித்தார்.