மேலும்

நாள்: 23rd October 2016

சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது வாள்வெட்டு – இருவர் காயம்

சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் படுகொலையை கண்டித்து வடக்கில் நாளை மறுநாள் முழு அடைப்பு போராட்டம்

கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாளை மறுநாள் வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் கஜனின் உடல் கிளிநொச்சியில் அடக்கம்

கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

சர்ச்சைகளில் சிக்கிய மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு

சிறிலங்கா இராணுவத்தின் ஒன்பது பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன அறிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றுமாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

620 விமானப் பயணங்களை ரத்துச் செய்ய வேண்டிய நிலையில் சிறிலங்கன் விமான சேவை

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், சிறிலங்கன் விமான சேவையின் 620 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த சில வாரங்களில், தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியா நோக்கி விரையும் சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள், இந்தியக் கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.

இளம் ஊடகவியலாளர் அஸ்வினின் உடல் மாதகலில் நல்லடக்கம்

உக்ரேனில் காலமான இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர வரைஞருமான அஸ்வின் சுதர்சனின் இறுதிநிகழ்வு நேற்று மாதகலில் இடம்பெற்றது.