மேலும்

நாள்: 9th October 2016

அடுத்த ஆண்டிலும் பாதுகாப்புக்கே அதிக நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சுக்கு பெரும் வெட்டு

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கின் வீதி வலையமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா உதவி

வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகராகிறது பிரித்தானியாவின் கிங்ஸ்டன்

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திடவுள்ளார்.