மேலும்

மாதம்: March 2016

சீனாவுடன் பல்வேறு முக்கிய உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார் ரணில்

அடுத்தவாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள அதிகாரபூர்வ பயணத்தின் போது, சீன அதிகாரிகளுடன் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடும் என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களை விலக்கவில்லை- யாழ். படைகளின் தளபதி

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து, சிறிலங்கா இராணுவத்தினரின் எந்த முகாம்களும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்று யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

நுழைவிசைவு காலாவதியான 3,857 இலங்கையர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர்

நுழைவிசைவு காலாவதியான பின்னரும், இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், இலங்கையர்கள் இரண்டாமிடத்தில் இருப்பதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இனி அடுத்தடுத்து கொழும்பு வரும் – அமெரிக்கத் தூதுவர் சூசகம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர்களின் முடிவை அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்.

கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள்

கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக “காக்கைச் சிறகினிலே” இதழ் குழுமத்தினரால் நடத்தப்பட்ட புலம்பெயர் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோத்தாவும் பசிலுமே மகிந்தவைத் தோற்கடித்தனர்- தயான் ஜெயதிலக

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும், தம்மை முதன்மைப்படுத்தினர். இதற்கான விலையை மகிந்த ராஜபக்ச கொடுக்க வேண்டியேற்பட்டது என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா அதிபர்

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனைச் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.

400 மில்லியன் டொலர் செலவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்கிறது ஜப்பான்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையத்தை அமைப்பதற்கு, 400 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதற்கு  ஜப்பான் முன்வந்துள்ளது.

சம்பூரில் முன்னரைவிடப் பெரிய தளத்தை அமைத்துள்ள சிறிலங்கா கடற்படை

சம்பூரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளத்துக்குப் பதிலாக, அதைவிடப் பெரியதொரு தளத்தை அதே பகுதியில் அமைத்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தும் சிறிலங்கா அதிபர் – அனைத்துலக ஊடகம்

சிறிலங்காவின்  அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் வாக்குறுதியை வழங்கியிருந்தாலும் கூட, அந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கெட்டவாய்ப்பாக இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.