புலிகளின் ஈகத்தை வைத்து நடத்தப்படும் ஈனத்தனமான அரசியல் பிழைப்பு
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது.
சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு (Presidential Security Division – PSD) முற்றாக கலைக்கப்பட்டுள்ளதாக பொது ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும்- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்- அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் பலம் தமது வாக்குகளில்தான் தங்கியுள்ளது என்பதனை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் மறந்து விடக்கூடாது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, மின்னேரியா இராணுவ முகாமில் பணியாற்றிய இரண்டு சிறிலங்கா படையினர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக அவர் படையினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுடன் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளதாக கிடைத்துள்ள அறிக்கைகளை அடுத்து மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவை உடனடியாக மாற்றியமைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா தேர்தல் வரலாற்றின் பிரகாரம், தோற்கடிக்கப்பட்ட எந்தத் தலைவர்களும் அல்லது தோற்கடிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மையாகும்.
சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தலை ஒட்டி வன்முறைகள் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.