சிறிலங்காவில் வன்முறைகள் நிகழலாம் – அமெரிக்கா எச்சரிக்கை
சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தலை ஒட்டி வன்முறைகள் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவுக்குச் செல்லும், சிறிலங்காவில் வதியும் தமது நாட்டுக் குடிமக்கள் இத்தகைய தேர்தல் வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூர் ஊடகங்களை அமெரிக்க குடிமக்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் நடக்கின்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக திரும்பமான என்பதால், இத்தகைய பேரணிகள், போராட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறலாம் என்று ஏற்கனவே, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.