மேலும்

Archives

சீனக் கடற்படையின் பாரிய கப்பல் வெள்ளியன்று கொழும்பு வருகிறது

சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்ற அமெரிக்கா உதவும் – கூட்டறிக்கையில் தெரிவிப்பு

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, தெரிவித்துள்ளது.

தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு அழுத்தம் – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

ரணில், மாரப்பனவுடன் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பேச்சு

சிறிலங்காவுக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்

பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கொழும்பு வந்தது பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின், பிஎன்எஸ் சைய்ப் என்ற போர்க்கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மகிந்தவுக்கு முந்திரி கொடுத்த மலிக் சமரவிக்கிரம

அரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று சிறிலங்கா அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து ரகர் போட்டியை கண்டு களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஐரோப்பிய ஒன்றிய குழு ஏமாற்றம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த ஆண்டு கொடுத்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு மூன்று ரோந்துப் படகுகளை வழங்குகிறது அவுஸ்ரேலியா

சிறிலங்காவுக்கு மூன்று ஸ்டபி கிராப்ட் வகை படகுகளை (Stabicraft vessels) அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. நேற்றுக்காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், சிறிலங்கா அஅதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போது இதற்கான உறுதி மொழியை அளித்துள்ளார்.