பிரிகேடியர் உள்ளிட்ட 4 இராணுவத்தினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் விசாரணை
ரதுபஸ்வெலவில் குடிநீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க, மூன்று நீதியரசர்களைக் கொண்ட ட்ரயல் அட் பார் அமர்வு ஒன்றை நியமிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரிடம், சட்டமா அதிபர் கோரியுள்ளார்.