மகிந்தவை அனைத்துலக நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல விடமாட்டோம் – ஐதேக சூளுரை
எந்தவொரு சிறிலங்கா தலைவரையும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்க்கட்சியான ஐதேக அறிவித்துள்ளது.
எந்தவொரு சிறிலங்கா தலைவரையும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்க்கட்சியான ஐதேக அறிவித்துள்ளது.
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நீர்த்துப் போகும் வகையில் திருத்தங்களைச் செய்வதில் முக்கிய பங்காற்றிய, இந்திய இராஜதந்திரியான திலிப் சின்காவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு பாப்பரசர் பிரான்சிசின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா கத்தோலிக்கத் திருச்சபை , அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகதி நிலையை உறுதிப்படுத்தும் அட்டைகளை வைத்திருந்த போதிலும் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்த ஆண்டில் சிலர் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலானது மலேசியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2015ம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளும்கட்சியில் தாம் இணைந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.
இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்திய மூன்று வாரகால கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று அம்பாந்தோட்டையில் நிறைவடைந்தது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து எதிரணியினர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பது, அல்ஜசீரா தொலைக்காட்சிக் கலந்துரையாடல் மூலம் அம்பலமாகியுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினால், போர்க்குற்றச்சாட்டுகளுக்காக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று உலகத் தமிழர் பேரவையின் மூலோபாய முயற்சிகளுக்கான பணிப்பாளர் சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.