வடக்கு, கிழக்கு, மலையகமே தோற்கடித்து விட்டது – பொருமுகிறார் மகிந்த
வடக்கு, கிழக்குப் பகுதிகளும், மலையகமுமே அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்த மகிந்த ராஜபக்ச, அலரி மாளிகையில் இருந்து வெளியேறி, நேற்றுமாலை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றார்.
அங்கு அவருக்கு சிறியளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தோல்வியுற்ற முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பலரும் ஆறுதல் கூறினர்.
அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, வடக்கு,கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகளே தான் தோல்வியடையக் காரணம் என்று தெரிவித்தார்.
மற்றபடி, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும், ஏஐனய பகுதிகளில் பெருமளவான மக்களின் ஆத்தரவு தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.