மேலும்

தப்பியோடலைத் தடுக்க விழிப்பு நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம்

airportகட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் விழப்பு நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் சலுகைகளைப் அனுபவித்த சிலர் நாட்டை விட்டுத் தப்பியோடலாம் என்பதாலேயே, கட்டுநாயக்க விமான நிலையம் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு முக்கிய அரசியல் புள்ளிகளும், முன்னாள் போராளித் தலைவர் ஒருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லலாம் என்பதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *