சிவில் அதிகாரியின் கையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு
சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக, பி.எம்.யு.டி.பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில், கோத்தபாய ராஜபக்ச வகித்த பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள பஸ்நாயக்க, முன்னர், சுற்றாடல் அமைச்சின் செயலராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாக, இராணுவப் பின்னணி கொண்ட ஒருவரின் கட்டுப்பாட்டின் இருந்து வந்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் பதவி, சிவில் சேவை அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.