மேலும்

சிறிலங்கா அதிபராக மைத்திரி, பிரதமராக ரணில் பதவியேற்றனர்

maithri-takeouth (1)சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும், இன்று மாலை 6.21 மணியளவில்  பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் நடந்த நிகழ்வில், உயர்நீதிமன்ற நீதியரசர் சிறிபவன் முன்பாக, புதிய அதிபராக, மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக் கொண்டார்.

அவர், பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் முன்பாக பதவியேற்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற பின்னர், உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, தான் இரண்டாவது முறை அதிபர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என்று உறுதியளித்தார்.

maithri-takeouth (1)

ranil-takeouth

maithri-takeouth (3)

maithri-takeouth (4)

அத்துடன், தனது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும், ஐதேக, ஜனநாயக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *