மேலும்

மகசின் சிறையில் உண்ணாவிரதம் இருந்த 8 அரசியல் கைதிகள் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதி

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில், எட்டுப் பேர் நேற்றிரவு உடல் நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த, தமிழ் அரசியல் கைதிகளில் எட்டுப் பேரே, நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்  கடந்த திங்கட்கிழமை சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

நேற்று நான்காவது நாளாகவும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.

இந்தநிலையிலேயே நேற்றிரவு எட்டுப் பேரின் உடல் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் மகசின் சிறையில் உண்ணாவிரதம் இருந்த 12பேரும், அதற்கு முன்னைய நாள் ஒருவருமாக, 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுவரை 21 அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *