மேலும்

சிங்கப்பூர் சென்றார் ரணில் – பொருளாதார முதலீடுகளை பெறுவதே திட்டம்

RANILஇரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் போது, அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் அவர் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.

சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில், சிங்கப்பூரில் இருந்து பொருளாதார முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதே, ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிங்கப்பூர் முதலீட்டாளர்களை அதிகளவில் சிறிலங்காவுக்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் திட்டம் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பிரதமருடன், அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், சிங்கப்பூர் சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *