மேலும்

மாதம்: September 2019

நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது – ஞானசார தேரர்

உயிரிழந்த பிக்குவின் உடலை அடக்கம் செய்யாமல், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது என்றும், விகாரைக்கு சொந்தமான நிலத்திலேயே பிக்குவின் உடலை எரிந்ததாகவும், பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனையுடன் சஜித்தை வேட்பாளராக நிறுத்த ரணில் இணக்கம்

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை, கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்க தெரிவுக்குழு பரிந்துரை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது விசாரணை அறிக்கையை இறுதி செய்வதற்கான கூட்டத்தை நேற்று நடத்தியது. இதில் ஐந்து பிரதான விடயங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோத்தாவின் சுய வரலாற்று நூல் வெளியீடு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவின் சுயவரலாற்று நூலான, ‘கோத்தாபய’ கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தமாட்டோம் –  தயாசிறி

அதிபர் தேர்தலில் குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது பெயரைப் பரிந்துரைத்தால், வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணி

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின்  சடலத்தை எரித்த சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டன பேரணி இடம்பெற்றது.

எம்சிசி கொடையை சிறிலங்கா இன்னமும் இழக்கவில்லை – அமெரிக்கா

தமது 480 மில்லியன் டொலர் கொடையை சிறிலங்கா இன்னமும் இழந்து விடவில்லை என்று, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீராவியடி ஆலயம் அருகே பிக்குவின் உடல் தகனம் – காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, பௌத்த பிக்குவின் சடலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

குச்சவெளியில் இன்று நீர்க்காகம்- X இறுதி ஒத்திகை – பாகிஸ்தான் தளபதி வருகை

விமானப்படை, கடற்படையுடன் இணைந்து, சிறிலங்கா இராணுவம், நடத்தி வரும் நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை இன்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.