மேலும்

நாள்: 16th September 2019

வேட்புமனு தாக்கலின் பின்னரே யாருக்கு ஆதரவு என்று முடிவு – கூட்டமைப்பு

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரையும், ஆதரிக்கும் விடயத்தில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து ரணில் ஆலோசனை

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐதேக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளருக்கு ஜேவிபி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

பேரெழுச்சியுடன் யாழ். நகரில் எழுக தமிழ் பேரணி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், இந்தப் பேரணி இடம்பெற்றது.

கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் சஜித்தின் முயற்சி தோல்வி

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முதற்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலாலி விமான நிலைய விரிவாக்க பணிகளை ஒக்ரோபர் 10இற்குள் முடிக்க உத்தரவு

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள, பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள், வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

நாளை கொழும்பு வருகிறார் சீனாவின் உயர்மட்ட அதிகாரி

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அதிகாரியான சென் மின்  இரண்டு நாட்கள் பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நாட்களுக்குள் வெளியாகிறது அதிபர் தேர்தல் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நாள் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் காலஎல்லை அடங்கிய சிறப்பு அரசிதழ் அறிவிப்பு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.