ரணில், சஜித், கரு இன்று முக்கிய சந்திப்பு
அதிபர் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
அதிபர் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தை, நேற்று நள்ளிரவில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வந்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இருதரப்புக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.