மேலும்

நாள்: 11th September 2019

சிறிலங்கா நிலைமைகள் – ஜெனிவா இணை அனுசரணை நாடுகள் கவலை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றும் வேகம்  மெதுவாகவே உள்ளது என்றும்,  இதற்கு, அதிகாரத்துவ தடைகள் காரணமாக இருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான இணைஅனுசரணை நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

மோடிக்கும் மொட்டுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் சிங்கள வாக்காளர்கள்

பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியின் சின்னமாகவே தென்பகுதியில் தமது ஆதரவாளர்கள் பார்ப்பதால், அந்தச் சின்னத்தை ஏற்க முடியாதிருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை மதிப்பீடு செய்ய வருகிறது இந்திய தொழில்நுட்ப குழு

பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து  தொழில்நுட்பக் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரூபவாஹினியை வசப்படுத்தியது அரசியலமைப்பு மீறல் – சட்டநிபுணர்கள் கருத்து

சிறிலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீறுகின்ற செயல் என, சட்ட நிபுணர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இராணுவ கட்டமைப்பில் மாற்றம் – முன்னாள் புலனாய்வு பணிப்பாளருக்கு நேர்ந்த கதி

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதை அடுத்து, இராணுவக் கட்டமைப்பில் அதிரடியாக பல உள்ளக மாற்றங்களைச் செய்து வருகிறார்.

ரூபவாஹினியை கைப்பற்றிய மைத்திரிக்கு ருவன் காட்டமான கடிதம்

சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், கொண்டு வந்திருப்பதற்கு, பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மொட்டினால் தடைப்படும் கூட்டணி – குழப்பத்தில் சுதந்திரக் கட்சி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கு, பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னமே தடையாக இருக்கிறது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பங்காளிக் கட்சிகளை சந்திக்கும் ரணில், சஜித் – பேச்சுக்கள் சுமுகம்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுக்க, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்தினர்.