மேலும்

மாதம்: October 2019

மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு – சஜித்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்து அதனை வெளியிட்டார்.

கோத்தா ஆட்சிக்கு வந்தால் எம்சிசி உடன்பாடு மீளாய்வு – ரம்புக்வெல

அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால்,  அமைச்சரவையினால் நேற்று முன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 480 மில்லியன் டொலர் எம்சிசி கொடை உடன்பாடு உள்ளிட்ட அனைத்து இருதரப்பு உடன்பாடுகளையும், மீளாய்வு செய்வார் என்று, அவரது பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

உலங்குவானூர்தி விபத்தில் இருந்து தப்பினார் சஜித் – மொட்டு தரப்பு சதிவேலை?

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்றிரவு உலங்குவானூர்தி விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாகவும், இது ஒரு சதிவேலையாக இருக்கலாம் என்றும் ஐதேக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது – படையினருக்கு எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, முப்படையினர் மற்றும் காவல்துறையினர் எவரும் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பஷீரும், ஹசனும் கோத்தாவுடன் இணைந்தனர்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு முன்னாள் முக்கிய பிரமுகர்கள், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாடு கைச்சாத்து

வரும் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்காக அமெரிக்காவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்கா பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு மையங்களுக்குள் படம் எடுக்கக் கூடாது –படையினருக்கு எச்சரிக்கை

அதிபர் தேர்தலின் போது, வாக்களிப்பு மையங்களுக்குள் ஒளிப்படங்கள் அல்லது காணொளிப் படங்களை பிடிக்கக் கூடாது என்று, காவல்துறை மற்றும் முப்படையினரையும், தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல்அ மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சன்ன டி சில்வா தெரிவித்தார்.

விரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன.

நாடு திரும்பினார் சந்திரிகா – பதற்றத்தில் ‘கோத்தா முகாம்’

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.