அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்
சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு.
சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு.
சிறிலங்காவின் வரவுசெலவுத் திட்ட இடைவெளியைக் குறைப்பதற்கு உலக வங்கி தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கும் என்று, உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவித் தலைவர் ஹாட்விக் ஸ்காபர் உறுதி அளித்துள்ளார்.
மாகோ தொடக்கம் ஓமந்தை வரையிலான- வடக்கிற்கான 133 கி.மீ தொடருந்து பாதையை இந்திய உதவியுடன் மீளமைப்புச் செய்வதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இராணுவத் தளம் எதையும் அமைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்குக் கிடையாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சோபா உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதி அளிக்கவில்லை என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் வைத்திருப்பதற்கும் அமெரிக்கா முயற்சிக்கவில்லை என்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
சினோபெக் (Sinopec) எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம், சிறிலங்காவில் எரிபொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.