மேலும்

சிறிலங்காவுக்கான உதவிகளை அதிகரிப்பதாக உலக வங்கி உறுதி

சிறிலங்காவின் வரவுசெலவுத் திட்ட இடைவெளியைக் குறைப்பதற்கு உலக வங்கி தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கும் என்று, உலக வங்கியின்  தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவித் தலைவர் ஹாட்விக் ஸ்காபர் உறுதி அளித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று அவரது செயலகத்தில் சந்தித்துப் பேசிய போதே, உலக வங்கியின் உதவித் தலைவர் இந்த உறுதிமொழியை அளித்தார்.

காலநிலை மாற்றங்கள், நீர்ப்பாசனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காலநிலை மீளுருவாக்க நடவடிக்கைகள் மற்றும் கிராமப் புற குளங்களைப் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு உலக வங்கி அதன் மூன்று புதிய செயற்பாடுகள் மூலம் சிறிலங்காவுக்கான உதவியை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *