மேலும்

மாதம்: December 2018

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் செயற்படுவதாக கூறப்படும் ஆவா குழுவினால், தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வெறுமையாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம்

மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு, ஊடகத்துறை அமைச்சுக்களால் இழுபறி – அடம்பிடிக்கிறார் மைத்திரி

புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சு என்பன தொடர்பாக இழுபறி நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் – நாடாளுமன்றில் சம்பந்தன்

சபாநாயகர் தன்னைப் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்ததன் மூலம், நாடாளுமன்றத்தில் இப்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாளை காலை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை காலை 8.30 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா ஆர்வம்

சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ள அமெரிக்கா, அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கட்சி தாவிய எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி இல்லை – மைத்திரி எச்சரிக்கை

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, எந்தவொரு அமைச்சுப் பதவியையும் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

மைத்திரிக்கு மேலதிக அமைச்சுக்களை விட்டுக்கொடுக்க முடியாது – ஐதேக

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம்,  சட்டம், ஒழுங்கு மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தப்புமா மகிந்தவின் பதவி? – சுமந்திரனின் கேள்வியால் சிக்கல்

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விகளை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை முடிவை அறிவிக்கவுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

நாளை கொழும்பு வரும் ரஷ்ய போர்க் கப்பல்கள் அணி

ரஷ்யாவின் மூன்று போர்க் கப்பல்கள் நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.