மேலும்

மாதம்: October 2018

ரணிலை நீக்கும், மகிந்தவை நியமிக்கும் அரசிதழ்களை வெளியிட்டார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு அதி சிறப்பு அரசிதழ் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்க அச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அலரி மாளிகைக்குள் நுழைந்து ரணிலை வெளியேற்றுவோம் – மகிந்த அணி சூளுரை

பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால், அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று எச்சரித்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

அரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர் – மைத்திரிக்கு ரணில் கடிதம்

அரசியலமைப்பு ரீதியாக தாமே சிறிலங்காவின் பிரதமராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது கட்டுப்பாட்டில் என்கிறார் மங்கள

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் வசமானது சிறிலங்கா அரச ஊடகங்கள் – ஒளிபரப்புகள் நிறுத்தம்

சிறிலங்காவில் நேற்று கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அரச ஊடகங்களின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், நள்ளிரவில் அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் என்பனவற்றை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அரச ஒளிபரப்புகள் செயலிழந்தன.

அனைவரும் சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் சிறிலங்கா காவல்துறை மா அதிபருடன் மகிந்த ஆலோசனை

சிறிலங்கா பிரதமராக நேற்றுமாலை மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன், நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார்.

மகிந்தவிடம் தாவும் ஐதேக அமைச்சர்கள் ஆனந்த அளுத்கமகே, வசந்த சேனநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டு அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஆனந்த அளுத்கமகே, சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கப்பட்டது குறித்து ரணிலுக்கு சிறிலங்கா அதிபர் கடிதம்

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று முன்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

புதிய அமைச்சரவை நியமனம் உடனடியாக இல்லை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நியமனம், உடனடியாக இடம்பெறாது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.