மேலும்

மாதம்: October 2018

ரணிலையும் சந்தித்தார் சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா அதிபரால் நேற்றுப் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

20 நாடுகளின் தூதுவர்கள் அலரி மாளிகையில் ரணிலுடன் சந்திப்பு

ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மகிந்தவுக்கு வாழ்த்துக் கூறினார் சீனத் தூதுவர்

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகி்ந்த ராஜபக்சவை, சீன தூதுவர் சென் ஷியுவான் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் ஆதரவு யாருக்கும் இல்லை

அரசாங்கத்தை அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜேவிபி முடிவு செய்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

அனைத்து தரப்புகளும், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்  வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

அலரி மாளிகையில் இருந்து வெளியேற ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு

ரணில் விக்ரமசிங்க நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி காலக்கெடு விதித்துள்ளது.

மைத்திரியுடன் குதூகலமாக கைகுலுக்கிய ராஜபக்ச சகோதரர்கள்

சிறிலங்கா பிரதமராக நேற்றிரவு மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, ராஜபக்ச சகோதரர்கள், சிறிலங்கா அதிபருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

நாடாளுமன்றத்தை 3 வாரங்களுக்கு முடக்கினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு முடக்கும் உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்த தகவலை சபாநாயகர் செயலகம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பை மதித்து செயற்பட வேண்டும் – பிரித்தானியா

அனைத்துக் கட்சிகள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சிறிலங்காவின் அரசியலமைப்பை மதித்து, சரியான அரசியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு ஹக்கீம், றிசாத், மனோ ஆதரவு – மகிந்தவின் பக்கம் டக்ளஸ், தொண்டா

கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகள், சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடருவதற்கு, தொடர்ந்தும் ஆதரவளிக்க, முன்வந்துள்ளன.