மேலும்

ரணிலை நீக்கும், மகிந்தவை நியமிக்கும் அரசிதழ்களை வெளியிட்டார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு அதி சிறப்பு அரசிதழ் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்க அச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கும் ஒரு அரசிதழ் அறிவிப்பும், மகிந்த ராஜபக்சவை நாட்டின் புதிய பிரதமராக நியமித்துள்ளதாக இன்னொரு அரசிதழ் அறிவிப்புமே வெளியிடப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின்  உத்தரவின் பேரில், இந்த அரசிதழ் அறிவிப்புக்களை, அவரது செயலர் உதய செனிவிரத்ன இன்று அதிகாலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *