மேலும்

மாதம்: February 2018

ரவி கருணாநாயக்க பதவி விலகாவிடின் நீக்குவதற்கு நடவடிக்கை

ரவி கருணாநாயக்கவின் உபதலைவர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க விலகாவிடின், அவரைப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதேகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்காத அரச பணியாளர்களிடம் செலவுத் தொகை அறவீடு?

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவீடு செய்வது குறித்து சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு இரட்டிப்பு நிதியுதவி – அயல்நாடுகளுக்கு கூடுதல் நிதி

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களிடம் மன்றாடுகிறார் மகிந்த

தன் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் புதிய பிரதமர் – வெளியேற்றப்படுவாராம் ரணில்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற்றும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் டானியல் ரொசென்பிளம் சிறிலங்கா  வந்துள்ளார்.

இந்திய, சீன உறவுகளை சிறிலங்கா எப்படிச் சமநிலைப்படுத்தப் போகிறது?

‘ஆசிய விவகாரங்களைக் கையாள்வதும், ஆசிய விவகாரங்களைத் தீர்ப்பதும் அதன் பாதுகாப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் ஆசிய மக்களாவர்’ என 2014ல் இடம்பெற்ற ஆசியாவில் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை கட்டுமான அளவீடுகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து வெளியிட்டிருந்தார்.

சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கையில் இறங்குகிறது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியக சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமாம்

காணாமல் போனோர் பணியக சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.