மேலும்

மாதம்: February 2018

கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்திய ஊடகவியலாளரின் பார்வையில் சிறிலங்கா உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்து, தேசிய அரசை அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

சுதந்திரக் கட்சிக்கு காத்திருக்கும் பேரிடி – 7 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்ற வாய்ப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியுடன் நிபந்தனையுடன் பேசத் தயாராகிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை – விக்னேஸ்வரன்

வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் அலோசியஸ், பலிசேனவிடம் 12 மணிநேரம் விசாரணை – விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுள்ள பேர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையானரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது டுபாயில் சிக்கினார் உதயங்க வீரதுங்க

டுபாயில் நேற்று கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

இன்று கொண்டாடப்படும் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார்.

இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று சிறிலங்காவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்

சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.