புதுடெல்லி பேச்சுக்கள் வெற்றி – சிறிலங்கா பிரதமர்
கடந்தவாரம் புதுடெல்லிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்தியத் தலைவர்களுடன் தாம் நடத்திய பேச்சுக்கள் வெற்றிகரமானதாக அமைந்தன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளன.
எட்கா உடன்பாடு குறித்து இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டது. எமது பேச்சுக்கள் சாதகமாக முடிந்துள்ளன.
சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்திட்ட உடன்பாடு குறித்தும் இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது பேசப்பட்டது.
இந்த திட்டங்களில் சில தாமதமாகவது குறித்தும் கலந்துரையாடினோம்.
இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் இரண்டு திட்டங்களில் ஜப்பானும் இணைந்து கொள்ளவுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.