மேலும்

ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா

????????????????????அகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த செய்தி  அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

ஒருநாட்டின் தலைவர் எப்படி மக்கள் சேவை புரியவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள்.

அதிகாரம்மிக்க முதல்வர் பதவிவகித்த போதும், தமிழ்நாட்டின் முதல்ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்புகொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்.

இலங்கைத்தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்களப் பேரினவாத அரசுக்கும் இனக்கொலை நடத்திய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தமிழ் மக்களுக்காக அனைத்துலகத்திடம் நீதிகோரி கட்சி வேறுபாடுகளின்றி நிறைவேற்றப்பட்ட கவனயீர்ப்புத் தீர்மானத்தில் உரையாற்றிய போது,  சிங்களஅரசு ஈழத்தமிழர்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும், இனஅழிப்புக்கு எதிராகவே ஈழத்தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது என்றும், உலகநாடுகளின் கவனத்திற்கு வெளிப்படையாகச் சொன்ன ஒரேயொரு தலைவர் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா மட்டும்தான்.

இலங்கைத்தீவில் வாழும் ஈழத்தமிழர்கள், ஈழத்தின் பூர்வகுடிமக்கள் என்பதையும், சிங்கள இனவாதம் அவர்களை நசுக்கி அழிக்க முனைகிறது என்பதையும்,  நடைபெற்ற படுகொலைகள் தமிழின அழிப்பின் வெளிப்பாடு என்பதையும் உலகத்துக்குச் சொன்னார்.

தமிழர்களுக்காக ஓங்கிஒலித்த அந்தக் குரல்அடங்கி விட்டது. அவர் மறைந்து விட்டார். என்பது தாங்க முடியாத துக்கத்தைத் தருகிறது.

ஈழத்தமிழர்களும், உலகத்தமிழர்களும், தாய்த்தமிழகம் உள்ளிட்ட தரணி வாழ் தமிழர்களும் நன்றி உணர்வோடு தாய்த்தமிழகத்தின் மாபெரும் தலைவர், இரும்புப்பெண்மணி அம்மையார் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் இந்த நேரத்தில், ‘புதினப்பலகை’ குழுமத்தின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஈழத்தமிழ் மக்களின் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்கும் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்களின் புகழ் காலத்தால் அழியாது நிலைத்திருக்கும்.

– புதினப்பலகை குழுமத்தினர்

5 கருத்துகள் “ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா”

  1. maran says:

    jayalalitha only insisted and succeeded to impose ban on LTTE in India, then only Europe , America and other countries banned LTTE , Tamils were defeted.
    during her life she neither supported eelam people , separate Eelam nor LTTE. After the defeat of LTTE and Tamils defeat she acted as if she is the supporter of Eelam Tamils. She is not the saviour of Eelam Tamils

  2. Nakkeeran says:

    This statement shows the Puthinappalakai editorial board is out of its mind. As correctly pointed out by maran Jayalalithaa is an opportunist politician. She never ever mentioned the word Eelam in her speeches or press releases. She always styled the eelam Tamils as Ilankai Thamilar. At the height of war when people were dying like flies she claimed that it is not unusual for ordinary people to die in war. It was after the war was over she started behaving like a Tamil nationalist interested in the cause of Ilaikai Thamilar. It was sun worship after going blind.

  3. நக்கீரன் says:

    புதினப்பலகை ஆசிரிய குழுமம் எந்த உலகத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசியல் வரலாறு அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது.
    தமிழ்நாட்டில் வி.புலிகளுக்கு எதிராக தீவிரமாக செயற்பட்டவர் ஒரு அரசியல்வாதியைக் குறிக்க வேண்டும் என்றால் அது ஜெயலலிதான்.
    வி.புலிகள் இராசீவ் காந்தியைக் கொன்று விட்டார்கள் என நீலிக் கண்ணீர் வடித்து 1991 இல் ஆட்சியைப் பிடித்தவர் ஜெயலலிதா.
    ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு, ஸ்ரீலங்கா அரசோடு தொடர்பு கொண்டு, பிரபாகரனை ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார். ஸ்ரீலங்கா அரசின் அனுமதியை பெற்று, நமது இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்து கொண்டு வர வேண்டும், பிரதமரை கேட்டுக் கொண்டார்.
    அ.தி.மு.க. ஆட்சியில் 2002 ஏப்ரல் 16ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில், பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி இடம்பெற்றிருந்த அனல் வரிகளின் பின் கண்ணோட்டம் இது..!
    “1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் அன்று, ராஜீவ் காந்தி மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையும், இந்தக் கொடூரமான செயலில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் உறுதியாக சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதையும் இந்த நாடு இன்னும் மறந்துவிடவில்லை.. 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக, மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடை செய்தது.
    “படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் இராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்திய திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.
    ஸ்ரீலங்கா நாட்டில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகளையும், அந்த நாட்டைச் சார்ந்த தீவிரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். 10.4.2002 அன்று சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததையும் பார்த்து, தமிழக மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து நழுவும் தோரணையில் பிரபாகரன் தெரிவித்த கருத்துக்கள் பற்றி இந்தச் சட்டமன்றப் பேரவை மிகவும் கவலை கொள்கிறது.
    தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால், நமது நாட்டுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தை நன்கு உணர்ந்த மத்திய அரசு, அண்மையில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம், அதாவது பொடா சட்டத்தின் கீழ் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது.
    பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் 14.4.2002 அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி என்றும், அது பற்றி வழக்கு இன்னும் நடைபெற்று வருவதால், அது முடியும் வரை கருத்து ஏதும் கூற இயலாது என்றும் தெரிவித்திருப்பது முற்றிலும் புதிராக உள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றம். ராஜீவ் காந்தி அவர்களின் கொலையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்தக் கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளி என்ற அறிவிப்பையும் செய்துள்ளது.
    முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் எதிரியின் குண்டு மழையில் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்து கொண்டிருந்த போது ‘இரும்பு மனுசி’ என்ன சொன்னார்? “போரின் போது சாமானிய மக்கள் சாவது சகஜம்தான்” என்றார்.
    2011 இல் நடந்த சட்ட சபைத் தேர்தல் சமயத்தில்தான் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு பரிந்து பேசத் தொடங்கினார். பொது வாக்கெடுப்பு வேண்டும் என்றார். பொருளாதாரத் தடை வேண்டும் என்றார். அது கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்தவன் கதையாக இருந்தது.
    வி.புலிகள் மீதான தடையை ஜெயலலிதா கடைசிவரை நீக்கவில்லை. தடை நீடிப்புக்கு இறக்கு மட்டும் பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருந்தார்.

    1. GM says:

      உண்மையை சொன்னிர்கள்.
      இக்கரைக்கு அக்கரை பச்சை. என்ற பார்வையில் புதினம் உள்ளது.
      ஈழ தமிழ்மக்களின் பாதுகாப்பு அரண்களாக விளங்கியவர்கள் ஈழ மண்ணின்
      மைந்தர்கள்!. அவர்களே மாவீரர்கள்.

  4. A VALEMURUGAN says:

    Jayalalitha whilst she was the CM of Tamil Nadu was the one and only one Tamil leader who issued very strict order to all Tamil Nadu Universities NOT to admit any Sri Lankan students for any professional courses. How could anyone say that she helped the Tamils of Sri Lanka. She was a Monster. A liar. Corrupt. ……………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *