மேலும்

Tag Archives: இந்தியா

இராணுவ மயப்படுத்தப்பட்ட ‘1990’ நோயாளர் காவு வண்டி சேவை

இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய என்ற கட்டணமற்ற நோயாளர் காவு வண்டிச் சேவை இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் சிறிலங்கா காவல்துறையை வலுப்படுத்த 134  வாகனங்களை வழங்கியது இந்தியா

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, இந்தியா 134  கப் வாகனங்களை கொடையாக வழங்கியுள்ளது.

போரின் போது கொழும்பு, காலியில் ஆயுதக் களஞ்சியங்களை நிறுவியிருந்தது சீனா

போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக,  கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு

எதிர்காலத்தில் இணையவழித் திருட்டு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்கும் விடயத்தில் ஒத்துழைப்பது குறித்து சிறிலங்காவும்,  இந்தியாவும்  பேச்சுக்களைத்  தொடங்கியுள்ளன.

மத்தல விமான நிலையத்தில் முதலீடு – சீன, இந்திய நிறுவனங்கள் போட்டி

மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக சிறிலங்காவின் துறைமுகங்கள்.  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி நாமே – சீனாவுக்கு இந்தியா பதிலடி

சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவே நீடிப்பதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா- சிறிலங்கா தரைவழிப்பாதை- அவசியம் மட்டுமல்ல, அவசரமானது

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே  தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது என்றும், அதற்குத்  தயங்குவதற்கான காலம் முடிந்து விட்டது என்றும்,  இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உடன்பாடு- இந்த மாதம் இறுதியாகும்

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் அதனை இந்தியாவினால் நியமிக்கப்பட்ட  அமைப்பு மூலம் நிர்வகிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவைத் தயாரிக்கும் பணி இந்த மாதம் நிறைவடையும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

2 மாதங்களுக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள்  இறுதி செய்யப்படும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீனாவை எதிர்கொள்ள சிறிலங்காவில் கடல்சார் இருப்பை அதிகரிக்கும் இந்தியா

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், தனது பொருளாதார இருப்பை வலுப்படுத்தவும், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும், இந்தியா தொடர்ச்சியான மூலோபாய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம், சிறிலங்காவில் தனது கடல்சார் இருப்பை அதிகரித்து வருகிறது.