மேலும்

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புதல்

Mattala-MRIAமத்தல விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட இந்தியாவுடன் இணைந்து சிறிலங்கா மேற்கொள்ளும் கூட்டு முயற்சித் திட்டங்களுக்கு சீனா முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு அண்மையில் மேற்கொண்டிருந்த அதிகாரபூர்வ பயணம் தொடர்பாக கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மத்தல விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவுடனான கூட்டு முயற்சித் திட்டங்களுக்கு சீனா முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளது.

சீனா, இந்தியாவுடன்  சிறிலங்காவுக்கு சுமுகமான நட்புறவு உள்ள நிலையில், சில அரசியல் சக்திகள் தவறாக வழிநடத்த முயற்சிப்பது, வருத்தமாகவும், அநாகரிகமாகவும் உள்ளது.

தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி,  சிறிலங்கா மற்றும் இரண்டு நட்பு நாடுகளுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

இரண்டு நாடுகளுடனும், சிறிலங்கா  சுமகமான நெருங்கிய கலாசார, மத, வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கிறது என்பதை சீனாவுக்கு நாள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன்.

பரஸ்பரம் அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில், இந்த நட்புறவு முன்னேற்றப்பட வேண்டியது முக்கியமானது என்றும் சீனாவுக்கு எடுத்துக் கூறினேன். இந்த உணர்வுகளை சீனா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *