ஐ.நாவின் தடைகளை மீறியது சிறிலங்கா – கண்காணிப்புக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டு
வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் பொருளாதாரத் தடையை, சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மீறியிருப்பதாக, ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் பொருளாதாரத் தடையை, சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மீறியிருப்பதாக, ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டத்தால் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவிற்கு எதிராக – இவர் தூதுவராகக் கடமையாற்றிய பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலைய திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுக கொள்கலன் முனைய திட்டம் போன்ற இருதரப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துமாறு, சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள், தனிநாட்டையோ, காவல்துறை அதிகாரங்களையோ, நீதித்துறை அதிகாரங்களையோ, அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை என்று, போர்க்குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவவில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.