அம்பாந்தோட்டைக்கு வந்த சீன குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடற்படை பலத்த பாதுகாப்பு
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பாந்தோட்டை துறைமுக தற்காலிக பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினர் கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, அடுத்த மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.