மேலும்

நாள்: 1st September 2017

மூத்த ஊடகவியலாளர் சி.குருநாதன் மறைந்தார்

மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று காலை திருகோணமலையில் காலமானார். தமிழ் , ஆங்கில ஊடகங்களுக்கு திருகோணமலையில் இருந்து இவர் செய்திகள், கட்டுரைகளை எழுதி வந்தார்.

கடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன?

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில்  இவர்  ‘ஏடன் வளைகுடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாத்தல்’ என்பது எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொன்சேகாவே பொறுப்பு – ஜெனரல் ஜயசூரிய

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்காவின் பதில் உதவிச் செயலர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா அதிபர், பிரதமருடன் சுஸ்மா தனித்தனியாக பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சரத் பொன்சேகா மீது போர்க்குற்றம் சுமத்தப்படாதது ஏன்? – கேள்வி எழுப்புகிறது பொது ஜன முன்னணி

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, போர்க்குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாதது ஏன் என்று, மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியான, சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.