மேலும்

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு தொடங்கியது – முன்வரிசையில் சம்பந்தன், சுமந்திரன்

IOC-colombo (4)இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் இன்று மாலை ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், பங்கேற்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், இன்று பிற்பகல் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதையடுத்து, அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

இந்தக் கருத்தரங்கில் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சீஷெல்ஸ் துணை அதிபர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

IOC-colombo (1)IOC-colombo (2)IOC-colombo (4) IOC-colombo (3)

IOC-colombo (5)

இந்த மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அம்பாந்தோட்டையில் எந்த வெளிநாட்டு இராணுவத் தளமும் அமைக்கப்படாது என்று தெளிவாக கூறினார்.

அத்துடன், இந்தியப் பெருங்கடல் அபிவிருத்தி நிதியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கருத்தரங்கில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இரண்டாவது வரிசையிலும், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ போன்றவர்கள் மூன்றாவது வரிசையிலும் அமர்ந்துள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் 35 நாடுகளைச் சேர்ந்த 150இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *