அம்பாந்தோட்டையில் இயற்கை எரிவாயு மின் திட்டம்- சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா
அம்பாந்தோட்டையில், இயற்கை எரிவாயு மின் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக, சீனாவுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து இரண்டு இயற்கை எரிவாயு மின் திட்டங்களை ஆரம்பிக்க ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது எரிவாயு மின் திட்டம் சீனாவின் மூலம் அமைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நான்காவது எரிவாயு மின் திட்டத்துக்கு கேள்விப்பத்திரம் கோரப்படும்.
இவை அனைத்தும் வெற்றிகரமாக அமைந்தால், எம்மால் நான்கு எரிவாயு மின் திட்டங்களையும் ஒரே சமயத்தில், திறக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.