மேலும்

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சம்பந்தன்

missing-colombo (1)தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை சிறிலங்காவில்  முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, கொழும்பில் நேற்று மாலை நடந்த, நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

காணாமல் போதல்- இனி ஒருபோதும் வேண்டாம் என்ற தொனிப் பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அமைச்சர் மனோ கணேசன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவில் சமூகப் பிரதிநிதிகளான நிமல்கா பெர்னான்டோ, பாக்கியசோதி சரவணமுத்து, பிரிட்டோ பெர்னான்டோ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

missing-colombo (2)missing-colombo (3)missing-colombo (1)missing-colombo (4)missing-colombo (5)

இந்தக் கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *