மேலும்

போரில் நடந்த சம்பவங்கள் எல்லாம் போர்க்குற்றங்கள் இல்லை- சிறிலங்கா அரசு

rajitha senaratneஉறுதியான ஆதாரங்கள் இருந்தால் மாத்திரமே, இராணுவ கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த எவர் மீதும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதுாடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“இராணுவ மோதலின் போது இரண்டு தரப்பினராலும் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும்.

ஆனால் அவை எல்லாவற்றையும் போர்க்குற்றங்கள் என்று வகைப்படுத்த முடியாது. போரில் நடந்த எல்லாக் கொலைகளுமே மனித உரிமை மீறல்களாக முடியாது.

அனைத்துலக கடப்பாடுகளுக்கு சிறிலங்கா கட்டுப்பட்டிருந்தாலும், மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் மாத்திரமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *