ஜெனரல் ஜயசூரியவை அனைத்துலக நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
பிரேசிலை விட்டுத் தப்பிச் சென்ற சிறிலங்கா தூதுவரான, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்கை, ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான, போல் ஸ்கலி தெரிவித்துள்ளார்.
‘இராஜதந்திர விலக்குரிமைக்குப் பின்னால் மறைந்திருப்பதோ, சட்ட சவாலை எதிர்கொள்வதற்கு முன்னர் தப்பியோடுவதோ, போதுமானதல்ல.
ஜெனரல் ஜெயசூரியவைக் கைது செய்வதற்கான அனைத்துலக காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.
ஹேக்கில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை கொண்டு செல்ல வேண்டும்.
இரண்டு தரப்புகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய, திறந்த வெளிப்படையான நீதி செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
இறந்துபோனவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு சரியான பதிலும், நீதியும் கிடைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.