சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் முதன்முதலில் பேச்சு நடத்திய இந்தியத் தூதுவர்
சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற ரவி கருணாநாயக்கவுக்கு சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து முதன்முதலில் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க நேற்றுமுன்தினம், வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.
இதையடுத்து, அவரை இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அத்துடன், இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக ரவி கருணாநாயக்கவுடன், இந்தியத் தூதுவருடன் பேச்சுக்களை நடத்தினார்.
புதிய வெளிவிவகார அமைச்சருக்கு முதன் முதலில் இந்தியத் தூதுவரே வாழ்த்துத் தெரிவித்து, அவருடன் முறைப்படியான பேச்சுக்களையும் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.