அவுஸ்ரேலியா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெராவைச் சென்றடைந்தார்.
அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் விடுத்த அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபருக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறிலங்கா அதிபர் நாளை கான்பெராவில் அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் உள்ளிட்ட அரசுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.